தெருநாய் பிரச்சனையைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று சென்னை உயர்நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. தெருநாய் பிரச்சனையை தடுக்க எடுத்த நடவடிக்கை பற்றி அறிக்கை தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் கெடு விடுத்துள்ளது. தெருநாய் பிரச்சனையை உச்சநீதிமன்ற உத்தரவின்படி தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது ஐகோர்ட். வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
