கரூர் தரகம்பட்டியில் உள்ள தனியார் பள்ளி பேருந்து, மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளியை நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக பேருந்து மீது சரக்கு லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். இதில் இரண்டு மாணவிகளுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
