பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஷி ஜின்பிங் 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்துள்ளார். டெல்லியில் நடைபெறும் இம்மாநாட்டின் இடையே, இன்று மாலை 5.45 மணிக்கு அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இரு நாடுகளுக்கிடையேயான எல்லை விவகாரம் மற்றும் வணிக உறவுகளை மேம்படுத்துவது குறித்து தலைவர்கள் 2 பேரும் தீவிரமாக ஆலோசனை மேற்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
