நிர்மல் குமாரின் தாயார் குறித்து திமுக அமைச்சர் ஆ.ராசா விமர்சித்து பேசியதற்கு தேமுதிக கண்டனம் தெரிவிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ள்ளார். சென்னையில் இன்று (செப்.16) பேட்டியளித்த அவர், பதவியில் இருப்பவர்கள் கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக ஒரு தாயை இழிவாக பேச யாருக்கும் உரிமையில்லை என்றும் கூறினார். மேலும், இச்சம்பவத்தில் அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்த நடவடிக்கை முற்றிலும் சரியானது என்றும் அவர் பேசினார்.
