Skip to content
Home » 71 வயது மூதாட்டி பலாத்காரம்…. 23 வயது வாலிபர் கைது….

71 வயது மூதாட்டி பலாத்காரம்…. 23 வயது வாலிபர் கைது….

  • by Senthil

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த பொன்பாடி கிராமத்தில் 71 வயது மூதாட்டி வசித்து வருகிறார்.  இவரது கணவர் 3 மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். இதனால் அந்த மூதாட்டி தனிமையில் வசித்து வந்துள்ளார். இதனை அதேபகுதியை சேர்ந்த சதீஷ்(23) என்ற இளைஞர் நோட்டமிட்டு அவரிடம் பேச்சுக் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில், மூதாட்டி துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டிற்குள் சதீஷ் நுழைந்துள்ளார். இதனைக் கண்டு மூதாட்டி அதிர்ச்சியடைந்துள்ளார். கையோடு கொண்டு வந்த கத்தியைக் காட்டி மிரட்டி மூதாட்டியை பலாத்காரம் செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மூதாட்டியிடம் இருந்த தங்க கம்மல் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பறித்துக் கொண்டு சதீஷ் தப்பியோடியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மூதாட்டி, இச்சம்பவம் தொடர்பாக மகளிர்  போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். தலைமறைவாக இருந்த சதீஷை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். 71 வயதான மூதாட்டியை 23 வயது இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!