Skip to content
Home » மரத்தில் தூக்கில் தொங்கிய வாலிபர்… திருச்சி அருகே சம்பவம்….

மரத்தில் தூக்கில் தொங்கிய வாலிபர்… திருச்சி அருகே சம்பவம்….

திருச்சி, கும்பகோணத்தான் சாலையில் இருந்து கல்லணை செல்லும் சாலையில் ஒரு மரத்தில் சுமார் 35 வயது முதல் 40 வயது நிரம்பிய வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கி கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தூக்கில் பிணமாக தொங்கிக் கிடந்த வாலிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி தூக்கு மாட்டி இருந்தார்.ஏதேனும் பிரச்சனையில் தூக்கு மாட்டy தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவரை யாராவது அடித்து கொன்று தூக்கில் பிணமாக தொங்கவிட்டனரா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். கும்பகோணத்தான் சாலையில் மரத்தில் வாலிபர் தூக்கு மாட்டி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!