Skip to content
Home » தஞ்சை அருகே மினி லாரி மோதி துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர் பலி….

தஞ்சை அருகே மினி லாரி மோதி துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர் பலி….

திருச்சி அண்ணா நகர் துப்பாக்கி தொழிற்சாலை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜன் என்பவரின் மகன் துரைராஜன் (39). இவர் ஊட்டியில் மத்திய அரசு நிறுவனமான துப்பாக்கி தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். விடுமுறைக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு துரைராஜன் திருச்சிக்கு வந்தார்.

பின்னர் தனது மனைவி சங்கீதாவுடன் நேற்று முன்தினம் பைக்கில் தஞ்சை மாவட்டம் மெலட்டூருக்கு வந்துவிட்டு மீண்டும் திருச்சிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தஞ்சை அருகே அருள்மொழிபேட்டை – மாரியம்மன் கோவில் புறவழி சாலையில் கும்பகோணம் நோக்கி சென்ற மினிலாரி துரைராஜன் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட துரைராஜன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மனைவி சங்கீதா பலத்த காயமடைந்தார். தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வந்து காயமடைந்த சங்கீதாவை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!