பாடகி சுசித்ரா மீது ஆர்த்தி ரவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ரவி மோகன் – ஆர்த்தி தொடர்பான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இவர்களது விவாகரத்துக்கு பாடகி கெனிஷா தான் காரணம் என ஆர்த்தியின் தாயார் சுஜாதா விஜயகுமார் கூறிய நிலையில் அதை ரவி மோகனும் கெனிஷாவும் மறுத்திருந்தனர். ஆனால் இருவரும் சமீபத்தில் ஒரு திருமண நிகழ்வுக்கு ஒன்றாக ஜோடியாக தோன்றினர். இது கோலிவுட் திரையுலகத்தில் பரபரப்பை கிளப்பிய நிலையில் பலரும் இவர்களது விவகாரம் தொடர்பாக சமூக வலைதளத்தில் தங்களது கருத்துகளையும் சிலர் யூட்யூபில் பேட்டிகளாகவும் கொடுத்து வருகின்றனர்.

மேலும் தன்னையும் தன் குடும்பத்தினரையும் துன்புறுத்தியதற்காகவும் அவதூறு பேசியதற்காகவும் சமூக ஊடகங்களில் ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தி வருவதற்காகவும் பாடகி சுசித்ரா மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகாரில் கோரிக்கை வைத்துள்ளார்.
