Skip to content
Home » அரியலூர்……..மாற்றுத்திறனாளி கணவன் கண்முன்னே மனைவி விபத்தில் பலி

அரியலூர்……..மாற்றுத்திறனாளி கணவன் கண்முன்னே மனைவி விபத்தில் பலி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே துளாரங்குறிச்சி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மாற்றுதிறனாளி ரமேஷ். இவரும் அவரது மனைவி பரிமளா ஆகிய இருவரும் மருக்காலங்குறிச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு செல்ல  டூவிலரில் ஜெயங்கொண்டம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது கல்லாத்தூர் ஆயாக்குளம் அருகே சென்றபோது அவ்வழியாக ஜெயங்கொண்டம் நோக்கி அதே திசையில் சென்ற கன்னியாகுமாரி செல்லும் அரசு பேருந்தின் டோரில் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் இடித்ததில் மோட்டார் சைக்கிள் ஓட்டி சென்ற ரமேஷ் மற்றும் பின்னால் உட்கார்ந்து சென்ற பரிமளா ஆகிய இருவரும் கீழே விழுந்தனர். அப்போது பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி பரிமளா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பரிமளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும் விபத்தில் காயமடைந்த ரமேஷ் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாற்றுத்திறனாளி கணவன் கண் முன்னே மனைவி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!