Skip to content
Home » ஏர் இந்தியா விமானத்தில் கேரள பயணி திடீர் உயிரிழப்பு…

ஏர் இந்தியா விமானத்தில் கேரள பயணி திடீர் உயிரிழப்பு…

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் வடகரை கூட்டுறவு மருத்துவமனை அருகே வசித்து வந்தவர் சச்சின்(42). இவர் ஓமன் நாட்டில் உள்ள அல்மரை சுஹார் கிளையில் விற்பனை மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஓமன் நாட்டில் உள்ள சுஹார் நகரில் அவர் பணிபுரிந்து வந்துள்ளார். அதற்கு முன்பு சவுதியில் சச்சின் பணிபுரிந்து வந்துள்ளார்.

சச்சின்
சச்சின்

இந்த நிலையில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் கோழிக்கோடு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் சச்சின் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். விமானம் தரையிறங்கும் முன்பே சச்சின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அவர் உடனடியாக விமான ஊழியர்களிடம் கூறியுள்ளார். அவர்கள் சச்சினுக்கு முதலுதவி அளித்துள்ளனர். ஆனாலும், அவர் உடல்நிலை சரியாகவில்லை என்று கூறப்படுகிறது.

அவர் உடல்நிலை சரியில்லாத தகவல் விமான நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டதால், கோழிக்கோடு விமான நிலையத்தில் மருத்துவக்குழுவினர் காத்திருந்தனர். மஸ்கட்டில் இருந்து கிளம்பிய விமானம், கோழிக்கோடு விமான நிலையத்தில் இறங்கியது. உடனடியாக சச்சினை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். ஆனால், அவர் உயிர் ஏற்கெனவே பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து விமான நிலைய போலீஸார், சச்சின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தனர். சச்சின் எதனால் உயிர் இழந்தார் என்பது குறித்து சோதனை செய்த பிறகே தெரிய வரும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

விமானம் மூலம் சொந்த ஊர் திரும்பியவர் வரும் வழியிலேயே உயிரிழந்த சம்பவம் வடகரை கிராமத்தில் சோகத்தைஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!