Skip to content
Home » அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு…. காருக்கு 3 பேர் போட்டி

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு…. காருக்கு 3 பேர் போட்டி

  • by Senthil

உலகப்புகழ்பெற்ற அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு  இன்று நடந்து வருகிறது. பிற்பகல் 3 மணி வரை 7ம் சுற்று போட்டி நடந்தது.  பழுப்பு நிற  உடையுடன் வீரர்கள் இறங்கினர்.  6 சுற்று வரை430 காளைகள் களம் கண்டன. இதில்  143 காளைகள் பிடிபட்டன.   காளைகள் முட்டி தள்ளியதில் பார்வையாளர்கள், வீரர்கள் , காளை உரிமையாளர்கள் உள்பட 51 பேர் காயமடைந்தனர். அவர்களில்40 பேர்  பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

7சுற்றுவரை  நடந்த போட்டியில்,   சிவகங்கை அபிசித்தர்,    குன்னத்தூர் திவாகர் ,கருப்பாயூரணி  கார்த்திக்  ஆகியோர் தலா 11 காளைகளை அடக்கி   மூவரும்  முதலிடத்தில் உள்ளனர்.  பாலமுருகன் , தமிழரசன் ஆகியோர் தலா 7 காளைகளை அடக்கி  2ம் இடத்தில் உள்ளனர். 7 சுற்று வரை 573 காளைகள் களம் கண்டன. அதில் 350  வீரர்கள்  களத்தில் இறங்கி  விளையாடி உள்ளனர்.

காளைகளை அடக்கி முதலிடம் பெறும் வீரருக்கு  கார் பரிசு வழங்கப்படுகிறது. காரை பரிசாக பெற 3 வீரர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.  இன்னும் 3 சுற்று போட்டி நடைபெற உள்ளது. அதில்  முதலிடம் யாருக்கு என்பது முடிவு செய்யப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!