உலகப்புகழ்பெற்ற அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடந்து வருகிறது. பிற்பகல் 3 மணி வரை 7ம் சுற்று போட்டி நடந்தது. பழுப்பு நிற உடையுடன் வீரர்கள் இறங்கினர். 6 சுற்று வரை430 காளைகள் களம் கண்டன. இதில் 143 காளைகள் பிடிபட்டன. காளைகள் முட்டி தள்ளியதில் பார்வையாளர்கள், வீரர்கள் , காளை உரிமையாளர்கள் உள்பட 51 பேர் காயமடைந்தனர். அவர்களில்40 பேர் பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
7சுற்றுவரை நடந்த போட்டியில், சிவகங்கை அபிசித்தர், குன்னத்தூர் திவாகர் ,கருப்பாயூரணி கார்த்திக் ஆகியோர் தலா 11 காளைகளை அடக்கி மூவரும் முதலிடத்தில் உள்ளனர். பாலமுருகன் , தமிழரசன் ஆகியோர் தலா 7 காளைகளை அடக்கி 2ம் இடத்தில் உள்ளனர். 7 சுற்று வரை 573 காளைகள் களம் கண்டன. அதில் 350 வீரர்கள் களத்தில் இறங்கி விளையாடி உள்ளனர்.
காளைகளை அடக்கி முதலிடம் பெறும் வீரருக்கு கார் பரிசு வழங்கப்படுகிறது. காரை பரிசாக பெற 3 வீரர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இன்னும் 3 சுற்று போட்டி நடைபெற உள்ளது. அதில் முதலிடம் யாருக்கு என்பது முடிவு செய்யப்படும்.