Skip to content
Home » 5 வயது இந்திய சிறுமி சுட்டு கொலை; அமெரிக்கருக்கு 100 ஆண்டு சிறை தண்டனை..

5 வயது இந்திய சிறுமி சுட்டு கொலை; அமெரிக்கருக்கு 100 ஆண்டு சிறை தண்டனை..

  • by Senthil

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரியில்,  மியா பட்டேல் என்ற 5 வயது இந்திய வம்சாவளி சிறுமி விளையாடி கொண்டு இருந்தாள். அப்போது திடீரென சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். சிறுமியின் தலையில் துப்பாக்கி குண்டு ஒன்று பாய்ந்து இருந்தது. அவர்கள் உடனடியாக சிறுமியை அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  3 நாட்கள் சிகிச்சையில் இருந்த சிறுமி பரிதாபமாக இறந்தாள்.  இந்த வழக்கில் 35 வயதுடைய ஜோசப் லீ ஸ்மித் என்பவருக்கு உள்ள தொடர்பு விசாரணையில் தெரிய வந்தது.  லூசியானா மாகாணத்தில் விமல் மற்றும் ஸ்னேகா பட்டேல் என்ற தம்பதி மோட்டல் ஒன்றை நடத்தி வந்தனர்.  அவர்கள் தரை தளத்தில் மகள் மியா மற்றும் அவரது சகோதரியுடன் ஒன்றாக வசித்து வந்து உள்ளனர். அந்த மோட்டலின் வாகன நிறுத்தும் இடத்தில் ஸ்மித் மற்றொரு நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, திடீரென துப்பாக்கியை எடுத்து சுட்டு உள்ளார். ஆனால், அது அந்த நபருக்கு பதிலாக பட்டேல் தம்பதியின் மகளான சிறுமி மியாவை தாக்கி பலியானது தெரியவந்தது.

மியா பட்டேலை கொலை செய்த குற்றத்திற்காக 60 ஆண்டுகளும் குற்றத்தை மறைக்க முயற்சி செய்தது உள்ளிட்ட பிரிவுகளின் அடிப்படையில்  மொத்தம் 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். குற்றவாளியான ஸ்மித் தொடர்ந்து சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும்.  பரோலில் வரவோ, தண்டனையை குறைக்கவோ முடியாது. சிறையில் அவரது நல்ல செயல்களுக்காக முன்பே விடுவிக்கும் சலுகை உள்ளிட்ட வேறு எந்த பலன்களையும் ஸ்மித் பெற முடியாது என்றும் முழு தண்டனை காலமும் அவர் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!