புதுக்கோட்டை மாவட்ட கழக அலுவலகமான பெரியண்ணன் மாளிகையில் திமுக முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர்அன்பழகனின் நினைவு நாளை முன்னிட்டு அவரது திரு உருவப்படத்திற்கு திமுக வினர்மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில் மாநிலங்களவை உறுப்பினர் எம் .எம் அப்துல்லா , சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிதை பித்தன் , வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் அரு.வீரமணி , நகரதிமுக செயலாளர் செந்தில், நகர்மன்ற துணைத் தலைவர் லியாகத்தலி , இளைஞரணி அமைப்பாளர் சண்முகம், சி.ஆர்.வி.சித்ரா மற்றும் திமுக முன்னோடிகளும், மாநில, மாவட்ட, நகர கழக, ஒன்றிய கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.