Skip to content
Home » ஆந்திராவில் புயல் கரை கடக்கும் பகுதி…. மக்கள் வெளியேற்றம்

ஆந்திராவில் புயல் கரை கடக்கும் பகுதி…. மக்கள் வெளியேற்றம்

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல் நாளை முற்பகலில் கரையக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு ஆந்திராவில் நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே பபாட்லா என்ற இடத்தின் அருகே  நாளை  பகல் 12 மணிக்கு முன்னதாக கரையை கடந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.புயல் கரையைக் கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 90-110 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நெல்லூர் முதல் மசூலிப்பட்டினம் வரை  பலத்த  பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே  பேரிடர் மீட்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.  கரையோரத்தில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.  புயல் கரை கடக்கும் பகுதியில்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!