Skip to content
Home » அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி…. அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்..

அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி…. அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்..

  • by Senthil

திருச்சி , அண்ணா விளையாட்டரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் இன்று நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டிகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்அன்பில் மகேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவநாதன் , மண்டல தலைவர் மதிவாணன் , மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஆண்டனி ஜோயல் பிரபு,மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஏராளமான மாணவர்கள் உற்சாகமாக கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!