Skip to content
Home » அண்ணாமலை பாதயாத்திரை… ரூ.1.75 கோடி வசூல்…. காங். எம்.பி. குற்றச்சாட்டு

அண்ணாமலை பாதயாத்திரை… ரூ.1.75 கோடி வசூல்…. காங். எம்.பி. குற்றச்சாட்டு

கரூருக்கு  பாதயாத்திரை வந்த  பாஜக தலைவர் அண்ணாமலை,  காங்கிரஸ் எம் பி ஜோதிமணியை கடுமையாக விமர்சனம் செய்தார்., 5 ஆண்டுகளில் தொகுதி பக்கம் வந்து  மக்களை சந்திக்காத சகோதரி ஜோதிமணி வேடந்தாங்கல் பறவை போல தேர்தலுக்காக மக்களை சந்தித்து போட்டோ சூட் நடத்தி வருகிறார்.  கர்நாடகா துணை முதல்வர் சிவகுமாரிடம் தேர்தலுக்காக ஜோதிமணி பணம் வாங்கினார். தேவைப்படும் பட்சத்தில் ஆதாரத்தை வெளியிடுவேன். ஜோதிமணி ஒரு பெண் என்பதால் பிழைத்து போகட்டும் என விமர்சனங்களை வைத்தார்.

இந்த நிலையில் கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் எம்பி ஜோதிமணி செய்தியாளர்களை  இன்று சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது:

 

பாதயாத்திரை என்ற பெயரில் இரண்டு மாவட்டங்களில் மட்டும்  அண்ணாமலை ரூ. 1.75 கோடி வசூல் செய்துள்ளார் . இதற்கான  ஆடியோ ஆதாரம் உள்ளது .இந்த  வசூலில்  அண்ணாமலைக்கு தொடர்பு இருப்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். இந்த யாத்திரையை வசூலுக்காக மட்டுமே  அண்ணாமலை பயன்படுத்துகிறார்.

நாங்களும் யாத்திரை நடத்தினோம். யாரிடமும் ஒரு பைசா கூட வாங்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!