புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை வ.சிராஜினிசாவுக்கு தமிழக அரசின் கல்வித்துறை சார்பில் அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கப்பட்டது. திருச்சி கலையரங்கில் இன்று நடந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த விருதினை வழங்கி பாராட்டினார்.
இந்த விருதினை வ.சிராஜினிசா பெற்றதால் அவர் பணியாற்றும் பள்ளிக்கு வளர்ச்சி நிதியாக ரூ.10 லட்சம் கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்டது. இதற்கான காசோலையையும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். விழாவில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுரு, கல்வித்துறை இயக்குனர்கள்
அறிவொளி,கண்ணப்பன் , திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.