Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து…. 3 பேர் படுகாயம்….

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே காஷ்மீர் டு கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் நாள் ஒன்றுக்கு 3000 மேற்பட்ட வானங்கள் சென்று வருகிறது.

அரவக்குறிச்சி அருகே அமைந்துள்ள புங்கம்பாடி கார்னர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் சேலத்தில் இருந்து நிலக்கோட்டை நோக்கி வெள்ளரிக்காய் ஏற்றிக்கொண்டு ஈச்சர் வாகனம் வந்து

 

கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக தேசிய நெடுஞ்சாலை துறை வாகனம் மீது மோதியதில் ஈச்சர் வாகனம் தலை குப்புற பள்ளத்தில் கவிந்து விபத்துக்குள்ளானது. பின்னால் வந்த கார் கட்டுப்பாடை இழந்து ஈச்சர் வாகனத்தில் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஈச்சர் வாகன ஓட்டுனர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் வேலை பார்த்து வந்த இரண்டு ஊழியர்கள் பலத்த காயம் அடைந்து ஈச்சர் வாகனம் ஓட்டுநர் திண்டுக்கல் மருத்துவமனையிலும், தேசிய நெடுஞ்சாலையில் பணிபுரிந்த இருவர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலையில் ஒரே நேரத்தில் மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து சம்பவ இடத்தில் அரவக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!