Skip to content
Home » 18 பேருக்கு நலத்திட்ட உதவி….. அரியலூர் கலெக்டர் வழங்கினார்

18 பேருக்கு நலத்திட்ட உதவி….. அரியலூர் கலெக்டர் வழங்கினார்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் இன்று  நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 330 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ரமண சரஸ்வதியால் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில் உடனடி நடவடிக்கையாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.9,050/- மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள் மற்றும் 8 பயனாளிகளுக்கு தலா ரூ.6,100/- வீதம் ரூ.48,800/- மதிப்பில் இலவச தையல் இயந்திரங்களையும் என மொத்தம் 9 நபர்களுக்கு ரூ.57,850/- மதிப்பில் நலத்திட்ட உதவிகைள மாவட்ட ஆட்சித்தலைவர் ரமண சரஸ்வதி வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சு.ஈஸ்வரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தட்சணாமூர்த்தி மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!