Skip to content
Home » அரியலூரில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்…

அரியலூரில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 405 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

முன்னதாக சமூக பாதுகாப்புத் திட்டம் சார்பில், செந்துறை வட்டம், வஞ்சினாபுரம் மதுரா, நல்லநாயகபுரம் கிராமம், திருராஜா என்பவரின் மகள் செல்வி.லஷ்மி ஸ்ரீ (06) நல்லநாயகபுரம் கிராமத்தில் உள்ள பெரிய

ஏரியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்ததைத் தொடர்ந்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1,00,000 -க்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா செல்வி.லஷ்மி ஸ்ரீ என்பவரின் தந்தை ராஜா, தாய் கனகவள்ளி ஆகியோரிடம் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரணி, மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) பவானி மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!