Skip to content
Home » அரியலூர் கொலை வழக்கில் சகோதரர்களுக்கு ஆயுள் தண்டனை….

அரியலூர் கொலை வழக்கில் சகோதரர்களுக்கு ஆயுள் தண்டனை….

  • by Senthil

அரியலூர் மாவட்டம் வைப்பூர் மேலத் தெருவில் வசித்து வரும் விவசாயி கண்ணன் மகள் விஜி என்பவரும் அதே கிராமத்தை சேர்ந்த அஜித் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் 20.06.2021 அன்று தனது மகள் விஜியை கட்டாயப்படுத்தி அழைத்து சென்றதாக தாயார் சுலோச்சனா தூத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து காவல் துறையினர் விஜியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.தனது மகள் விஜியை பெற்றோர்கள் தங்களது உறவினருக்கு திருமணம் செய்து வைத்தனர். இதனால் அஜீத் மற்றும் விஜி குடும்பத்தினரிடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் தனது

காதலியை வேறொரு நபருடன் திருமணம் செய்து வைத்ததாக 11.07.2021 அன்று விஜியின் தந்தையை அஜித் மற்றும் அவரது சகோதரர் அருண்மோகன் கடுமையாக தாக்கியும் இருவரும் அருவாளால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடித்துடித்து உயிரிழந்துள்ளார். இவ்வழக்கு குறித்த விசாரணை அரியலூர் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதி கர்ணன் அஜித் மற்றும் அருண்மோகன் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் குற்றவாளி இருவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!