Skip to content
Home » குழந்தையை கடத்த வந்ததாக ஒரிசா நபரை அடித்து உதைத்த கிராம மக்கள்…

குழந்தையை கடத்த வந்ததாக ஒரிசா நபரை அடித்து உதைத்த கிராம மக்கள்…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் நடைபெற்று வரும் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி உள்ளிட்ட பல்வேறு கட்டிட பணிகளில் பீகார் ஒரிசா உள்ளிட்ட பல்வேறு வட மாநிலத்தவர்கள் பணியாற்றி வருகின்றனர் இந்நிலையில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கண்டியான் கொல்லை கிராமத்தின் வடக்கு தெருவில் மர்ம நபர் ஒருவர் நடமாடியுள்ளார் இதனைப் பார்த்த கிராம மக்கள் குழந்தையை கடத்த வந்த நபரோ என எண்ணி அவனை பிடித்து அடித்து உதைத்துள்ளனர் சம்பவம் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மர்ம நபரை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் மேலும் போலீசாரின் விசாரணையில் ஒரிசா மாநிலம் கூந்திபூரி பகுதியைச் சேர்ந்த 58 வயதான பிரதீப் குமார் என்பது தெரியவந்துள்ளது மேலும் பிரதீப் குமார் கன்டியங்கொல்லை பகுதிக்கு எதற்காக வந்தார் அவருடன் வேறு யாரேனும் உள்ளார்களா என்பது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!