Skip to content
Home » அரியலூர் அருகே சோள தட்டைக்கு வைத்த தீயில் சிக்கி மூதாட்டி பலி…

அரியலூர் அருகே சோள தட்டைக்கு வைத்த தீயில் சிக்கி மூதாட்டி பலி…

  • by Senthil

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நல்லநாயகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பட்டம்மாள் ( 75). இவருக்கு சொந்தமான 8 ஏக்கர் சொந்தமான இடம் உள்ளது. இந்நிலையில் 2 ஏக்கரில் மக்கா சோளம் சாகுபடி செய்து அறுவடை செய்துள்ளார். இந்நிலையில் சோளம்‌ சாகுபடி செய்யப்பட்ட நிலையில் அதன் வயலில் உள்ள சோளத்தட்டையை தீயிட்டு கொழுத்தியுள்ளார். தீ மளமளவென தீ பிடித்து கட்டைகள் எரிந்த நிலையில் பக்கத்து கொல்லையில் உள்ள மக்காசோளம் தட்டைகள் எரிய ஆரம்பித்துள்ளது. இதனை

பார்த்த பட்டம்மாள் வேப்ப மரத்தின் தலை குச்சிகளை உடைத்து தீயை அணைக்க முயன்றுள்ளார். அதே நிலையில் கருப்பையா கோவிலில் உள்ளேயும் தீ சென்ற நிலையில் அதனை பார்த்த பட்டம்மாள்‌ அதனை அணைக்க சென்ற‌ நிலையில் தீ அவர் உடம்பில் பிடித்து எரிந்ததால் அவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து செந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!