Skip to content
Home » அரியலூரில் வளர்ச்சி திட்டப் பணி… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

அரியலூரில் வளர்ச்சி திட்டப் பணி… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.3.63 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா முன்னிலையில் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் பள்ளிகள், சாலை, குடிநீர் தேவைகள்,

நியாய விலைக்கடைகள், அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்டவைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் இன்றைய தினம் அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்து, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!