பெரம்பலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு, தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு உதயசூரியனில் வாக்களித்து தன்னை வெற்றிபெறச்செய்யும்படி ஆதரவு திரட்டி வருகிறார். நேற்று அவர் துறையூர் பகுதியில் ஆதரவு திரட்டினார். பெண்கள் பெருமளவில் தி்ரண்டு அருண் நேருவை வாழ்த்தி உதயசூரியனுக்கே வாக்களிப்போம் என்றனர்.
அமைச்சர் கே. என். நேரு, எம்.எல்.ஏக்கள் காடுவெட்டி தியாகராஜன், ஸ்டாலின் குமார் மற்றும் கூட்டணி கட்சி
நிர்வாகிகள் திறந்த காரில் வீதி வீதியாக சென்று வாக்கு கேட்டனர். வேட்பாளர் அருண் நேருவுக்கு வீதிகள் தோறும் பெண்கள் ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு வாழ்த்தினர்.
துறையூர் பெருமாள் கோயில் அடிவாரத்தில் வாக்கு சேகரிக்க சென்ற திமுக வேட்பாளர் அருண் நேருவை, பெண்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று எங்கள் ஓட்டு உதய சூரியன் சின்னத்திற்கே என்று உற்சாகம் பொங்க கூறினர்.
இந்த வாக்கு சேகரிப்பின்போது திமுக ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, வீரபத்திர தொமுச குணசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.