9-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.2-வது நாளான நேற்று இந்தியா 5 பதக்கங்களை வென்றது. இந்தியாவுக்கு முதலாவது பதக்கத்தை துப்பாக்கி சுடுதல் வீராங்கனைகள் ‘சுட்டு’ தந்தனர். பெண்கள் அணிக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் ரமிதா, மெகுலி கோஷ், ஆஷி சோக்சே ஆகியோர் அடங்கிய இந்திய அணி மொத்தம் 1,886 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பெற்று வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது.
இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் ஆடவர் துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றுள்ளது; 6.08.61 என்ற நேரத்தில் இலக்கை எட்டி இந்தியா வெண்கலம் பதக்கத்தை கைப்பற்றியது. டென்னிசில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா உஸ்பெகிஸ்தான் வீராங்கனையை 6-0, 6-0 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இன்று நடந்த ஆடவர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீரர்கள்1893.7 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றனர். இதன் மூலம் இந்தியா பதக்கப்பட்டியலில் தற்போது 6-வது இடத்தில் உள்ளது.