Skip to content
Home » ஆசியப்போட்டி…. துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்

ஆசியப்போட்டி…. துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்

  • by Senthil

9-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.2-வது நாளான நேற்று இந்தியா 5 பதக்கங்களை  வென்றது. இந்தியாவுக்கு முதலாவது பதக்கத்தை துப்பாக்கி சுடுதல் வீராங்கனைகள் ‘சுட்டு’ தந்தனர். பெண்கள் அணிக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் ரமிதா, மெகுலி கோஷ், ஆஷி சோக்சே ஆகியோர் அடங்கிய இந்திய அணி மொத்தம் 1,886 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பெற்று வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது.

இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் ஆடவர் துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றுள்ளது; 6.08.61 என்ற நேரத்தில் இலக்கை எட்டி இந்தியா வெண்கலம் பதக்கத்தை கைப்பற்றியது. டென்னிசில்  பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா உஸ்பெகிஸ்தான் வீராங்கனையை 6-0, 6-0 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இன்று நடந்த ஆடவர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீரர்கள்1893.7 புள்ளிகள் பெற்று  தங்கம் வென்றனர்.  இதன் மூலம்  இந்தியா  பதக்கப்பட்டியலில்  தற்போது 6-வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!