Skip to content
Home » பாம்பன் பாலம்….10ம் தேதி வரை ரயில் போக்குவரத்து ரத்து…..

பாம்பன் பாலம்….10ம் தேதி வரை ரயில் போக்குவரத்து ரத்து…..

  • by Senthil

பராமரிப்புப் பணிகள் காரணமாக, பாம்பன் பாலத்தில் ரெயில் போக்குவரத்து வரும் ஜனவரி 10ஆம் தேதி வரை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது . பாம்பன் பாலம் வழியாக ரெயில்கள் செல்ல, வருகிற 31-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அது ஜனவரி 10ஆம் தேதி வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. பாம்பன் பாலத்தில் வழக்கமான அளவை விட அதிகமான அளவில் அதிா்வுகள் ஏற்பட்டது கடந்த 23ம் தேதி கண்டறியப்பட்டது. இதையடுத்து, அங்கு பராமரிப்புப் பணிகள் தொடங்கி நடைபெறுகின்றன. இதன் காரணமாக, பாம்பன் பாலத்தில் ரயில்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!