Skip to content
Home » போலீசுக்கு பயந்து செல்போனை விழுங்கிய கைதி பட்டப்பாடு…

போலீசுக்கு பயந்து செல்போனை விழுங்கிய கைதி பட்டப்பாடு…

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டச் சிறையில் கைஷார் அலி என்பவர் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக சிறையில் உள்ளார். அண்மையில் அவருக்கு திடீரென கடுமையான வலிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனே அவரை சிறை அதிகாரிகள் உடனடியாக கோபால்கஞ்ச் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கைதி வயிற்றில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. அதில் நெஞ்சு பகுதியில் செல்போன் இருப்பது தெரியவந்தது. இதை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின்னர் கைதி கைஷார் அலியை மேல் சிகிச்சைக்காக பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சை ஏதும் இல்லாமல் எண்டோஸ்கோபிக் உதவியுடன் கைதி விழுங்கிய செல்போன்னை வயிற்றில் இருந்து பாட்னா மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர். சிறையில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது அதிகாரிகளுக்குப் பயந்து செல்போன் போனை விழுங்கியதாக கைதி கைஷார் அலி தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!