Skip to content
Home » காதலிக்கு பிறந்தநாள்.. .வாழ்த்த சென்ற காதலனை குத்திக்கொன்ற பெண்ணின் தந்தை..

காதலிக்கு பிறந்தநாள்.. .வாழ்த்த சென்ற காதலனை குத்திக்கொன்ற பெண்ணின் தந்தை..

கோவை சுந்தராபுரம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (21). இவர் தனியார் நிறுவனத்தில் லோடு மேனாக வேலை செய்து வந்தார். பிரசாந்த் செட்டிபாளையம் வசந்தம் நகர் பகுதியை சேர்ந்த 18 என்ற இளம் பெண்ணை கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். ஆரம்பத்தில் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிறகு அடுத்த ஆண்டு இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர். இந்நிலையில் இன்று இளம்பெண்ணின் பிறந்த நாள் என்பதால், அவருக்கு நள்ளிரவில் வாழ்த்து கூற பிரசாந்த் தனது நண்பர்கள் மூவருடன் ஒரே இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அவர்கள் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. 12 மணியளவில் இளம்பெண்ணின் வீட்டில் ஏறி குதித்து வீட்டுக் கதவை பிரசாந்த் தட்டிய போது அவரது உறவினரும் மற்றும் இளம்பெண்ணின் தந்தை ஆகியோர் கதவை திறந்துள்ளார். அப்போது பிரசாந்த் குடிபோதையில் இருந்ததால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறிய நிலையில் ஆத்திரமடைந்த பெண் வீட்டார் கத்தியை எடுத்து பிரசாந்தை குத்தியுள்ளார். இதனால் சரிந்து விழுந்த பிரசாந்தை அவரது நண்பர்கள் இரு சக்கர வாகனத்திலேயே அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் இரு சக்கர வாகனத்தின் பெட்ரோல் தீர்ந்ததால், ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர். இதை அடுத்து அங்கு வந்த 108 ஆம்புலென்ஸ் மூலம் பிரசாந்தை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த செட்டிப்பாளையம் போலீசார் இளம்பெண்ணின் தந்தை மற்றும் உறவினர் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பிறந்தநாள் வாழ்த்து கூற சென்ற காதலனை காதலி கண் முன்னே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!