கோவை பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். தேர்தல் பிரசாரத்தின்போது ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மறைத்து வைத்து பணம் கொடுப்பதுபோல் இன்றைய தினம் வீடியோ வெளியானது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் தொடர்பாக கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்டக்கலெக்டருமான காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து கோவை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:- “பகிரப்பட்ட வீடியோவை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். உண்மை நிலையை கண்டறிய போலீஸ் குழுவுக்கு வீடியோ அனுப்பப்பட்டுள்ளது. விசாரணை நடைப்பெற்று வருகிறது என குறிப்பிட்டுள்ளார்..