திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே விவசாயக் கிணறு ஒன்றில் இருந்து 15 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுவர்களின் சடலங்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சடலங்களைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், உயிரிழந்த சிறுவர்கள் யார், அவர்கள் கிணற்றில் தவறி விழுந்து இறந்தனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூரில் 2 சிறுவர்களின் சடலம் அழுகிய நிலையில் மீட்பு
