Skip to content
Home » பஸ்சில் பயணித்த கல்லூரி மாணவர் பரிதாப பலி…..

பஸ்சில் பயணித்த கல்லூரி மாணவர் பரிதாப பலி…..

கோவை, பொள்ளாச்சி அருகே தனியார் பஸ்சில் பயணித்த கல்லூரி மாணவர் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கேரள மாநிலம் மறையூரைச் சேர்ந்தவர் கதிரேசன். இவரது மகன் மதன்லால் (22) பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் உடுமலையில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி கல்லூரி சென்று வந்தார். சம்பவத்தன்று கல்லூரி முடிந்து வெளியே வந்த மதன்லால் கோவையில் இருந்து பழனி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ்சில் கல்லூரி முன்பிருந்த நிறுத்தத்தில் ஏறி உள்ளார். பேருந்தின் முன்பக்க படிக்கட்டில் ஏறிய மதன்லால் பேருந்து சிறிது தூரம் சென்ற நிலையில் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் பேருந்தின் பின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. இந்த சம்பவத்தில் மதன்லால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக  உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோமங்கலம் போலீசார் மதன் லாலின் பிரேதத்தை மீட்டு பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  பஸ்சை பறிமுதல் செய்த கோமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!