Skip to content
Home » டிரைவருக்கு திடீர் வலிப்பு…… தஞ்சையில் விபத்துக்குள்ளான பஸ்…. பயணிகள் காயம்

டிரைவருக்கு திடீர் வலிப்பு…… தஞ்சையில் விபத்துக்குள்ளான பஸ்…. பயணிகள் காயம்

தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் ஒன்றியம், அணைக்கரை வழியாக விருத்தாசலத்திற்கு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை டிரைவர் நடராஜன் (59) என்பவர் ஓட்டி சென்றார். சுமார் 20க்கும் அதிகமான பயணிகள் இந்த பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். திருப்பனந்தாள் மண்ணியாற்று பாலம் அருகே சென்று கொண்டிருந்போது  டிரைவர் நடராஜனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த பஸ் மண்ணியாற்று பாலம் அருகே நிலை தடுமாறி சாலையின் வலது பக்கம் இருந்த ஜல்லி மேட்டில் ஏறி விபத்துக்குள்ளானது.  பெரிய விபத்து ஏற்படுவதற்குள்  டிரைவர் பஸ்சை நிறுத்தி விட்டார். இதில் அணைக்கரை பகுதியை சேர்ந்த மாலா (50), செண்பகவல்லி (60), செல்வி (25), வீரசோழபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவி அனுசுயா (19) உட்பட 10க்கும் அதிகமானோர் லேசான காயமடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!