ஹரியாணா மாநிலம் மகேந்திரகர் மாவட்டம், கனினா கிராமம் அருகே இன்று காலை, தனியார் பள்ளிப் பேருந்து ஒன்று, மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. அந்தப் பேருந்தில் 4ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் 40 மாணவர்கள் இருந்தனர்.
இந்த விபத்தில் 5 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 15 மாணவர்கள் படுகாயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மகேந்தர்கர் மற்றும் நார்னவுல் பகுதிகளில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ரமலான் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை விடப்பட்டபோதிலும் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி இன்று இயங்கியுள்ளது. இச்சூழலில் பள்ளிக்கு மாணவர்களை ஏற்றிச் சென்றபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது.