Skip to content
Home » தமிழகத்திற்கு காவிரி நீரை கர்நாடக அரசு வழங்கக்கோரி மத்திய அரசிடம் மனு….

தமிழகத்திற்கு காவிரி நீரை கர்நாடக அரசு வழங்கக்கோரி மத்திய அரசிடம் மனு….

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தபடி புதுதில்லியில் இன்று (19.09.2023) ஒன்றிய அரசின்   ஜல்சக்தி துறை அமைச்சர்   கஜேந்திர சிங் ஷெகாவத், தமிழ்நாடு அரசின் நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன்   தலைமையில், தமிழ்நாட்டின் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு சந்தித்து, தமிழ்நாட்டுக்கு சேரவேண்டிய காவிரி நீரை கர்நாடகம் உடனடியாக வழங்கிட ஒன்றிய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனுவினை வழங்கினார். இந்நிகழ்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள்  டி.ஆர்.பாலு,  எஸ்.எஸ். பழனி மாணிக்கம் (திமுக),  தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி  கே.எஸ்.விஜயன், செல்வி எஸ்.ஜோதிமணி (இ.தே.கா), முனைவர் மு.தம்பிதுரை மற்றும்  என்.சந்திரசேகரன் (அஇஅதிமுக),  கே.சுப்பராயன் (சிபிஐ),  பி.ஆர்.நடராசன் (சிபிஎம்),  வை.கோ (மதிமுக), முனைவர் தொல். திருமாவளவன் (விசிக), டாக்டர் அன்புமணி ராமதாஸ் (பாமக),  ஜி.கே.வாசன் (தமாகா),  கே.நவாஸ் கனி (இயூமுலி)  ஏ.கே.பி. சின்னராஜ் (கொமதேக) மற்றும் தமிழ்நாடு அரசின் நீர்வள துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா. ஆகியோர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!