Skip to content
Home » காவிரி…. தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு

காவிரி…. தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி  நீர்மட்டம் 37.85 அடி. அணைக்கு வினாடிக்கு 8,181 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 6,503 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 11.008 டிஎம்சி.

கல்லணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 2,402 கனஅடியும்,  கல்லணை கால்வாயில் 1,412 கனஅடியும், கொள்ளிடத்தில் 411 கனஅடியும் திறக்கப்படுகிறது. வெண்ணாற்றில் தண்ணீர் திறக்கப்படவில்லை.  கடந்த ஆண்டு இதே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 119.33 அடி.

இந்த நிலையில்  கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு  இன்று அதிகரிக்கப்பட்டு உள்ளது. கே. ஆா். எஸ் அணையில் இருந்து வினாடிக்கு 4,105 கனஅடியும், கபினியில் இருந்து 2,500 கனஅடியும் திறக்கப்படுகிறது.  கர்நாடகத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே  உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றும் வகையில் தமிழகத்திற்கு நீர் திறப்பை  கர்நாடக அரசு, சற்று அதிகரித்து உள்ளது.

இதற்கிடையே கா்நாடகத்தில் பாஜக மற்றும் சில கட்சிகள், விவசாயிகள்  தமிழகத்திற்கு தண்ணீர் விடக்கூடாது என போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!