காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விட கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தமிழகத்தின் கோரிக்கையை ஏற்ற அதிகாரிகள், 15 நாட்களுக்கு தினமும் 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த நிலையில் இன்று கர்நாடகத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இதில் ஒழுங்காற்றுக்குழு உத்தரவு குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது இல்லை என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டம் முடிந்து வெளியே வந்த முதல்வர் சித்தராமையா கூறும்போது, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாமுது. 123 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆகஸ்ட் மாதம் மழை குறைவாக கர்நாடகத்தில் பெய்துள்ளது. இது குறித்து உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்ய இருக்கிறோம். அணைகளில் தண்ணீர் இல்லை என்பதை விளக்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.