Skip to content
Home » சிபிஐ என கூறி திருச்சி முதியவரிடம் ரூ.50 லட்சம் அபேஸ்….

சிபிஐ என கூறி திருச்சி முதியவரிடம் ரூ.50 லட்சம் அபேஸ்….

திருச்சி,  தில்லைநகர் 11-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் சூரிய நாராயணன் ( 76). இவருக்கு ஒரு மகன்,  2 மகள்கள் உள்ளனர். மகன் அமெரிக்காவிலும், ஒரு மகள் மும்பையிலும், இன்னொரு மகள் கொல்கத்தாவிலும் உள்ளனர். சூரிய நாராயணன் தில்லை நகர் வீட்டில் வசித்து வருகிறார்.  இவருக்கு மர்மநபர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு தாங்கள் மும்பை போலீஸ் எனவும், சிபிஐ எனவும் கூறியுள்ளனர். நீங்கள் 2 கோடி ரூபாய் அளவுக்கு ஹவாலா மோசடி செய்துள்ளீர்கள்.  உங்களிடம் விசாரிக்க வேண்டும், உங்களது. வங்கி கணக்கை சரிபார்க்க வேண்டும் என கூறியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சூரிய நாராயணன் தனது வங்கி கணக்குகளை அவர்களிடம் சமர்ப்பித்துள்ளார். சற்று நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.50 லட்சத்து 80 ஆயிரத்தை எடுத்து விட்டனர். அனைத்து கணக்கு வழக்குகளையும் சரி பார்த்தபிறகு பணத்தை திருப்பி அனுப்புவதாக அவர்கள் கூறியுள்ளனர். ஆனால், நீண்ட நாள் ஆகியும் பணத்தை திருப்பி செலுத்தவில்லை. இதனால், சந்தேகம் வந்த சூரிய நாராயணன் இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!