Skip to content
Home » திருச்சியில் கூடுதல் ”கேமரா” பொருத்த நடவடிக்கை….. கமிஷனர் சத்தியபிரியா பேட்டி

திருச்சியில் கூடுதல் ”கேமரா” பொருத்த நடவடிக்கை….. கமிஷனர் சத்தியபிரியா பேட்டி

  • by Senthil

திருச்சி பெரியக்கடை வீதியில் உள்ள சௌந்தரபாண்டியன் பிள்ளை தெருவில் நேற்று ஒரு கிலோ தங்க நகை 250 கிராம் வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் திருடு போன நிலையில் 4 மணி நேரத்தில் திருச்சி மாநகர காவல் துறையினர் அதிரடியாக திருடர்களை மடக்கிப்பிடித்து, கொள்ளைபோன நகை, பணத்தை மீட்டனர்.  இது தொடர்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா கோட்டை காவல் நிலையத்தில் செய்தியாளர்களிடம்  கூறியதாவது:

25ம் தேதி நகை செய்யும் ஆசாரியின் வீட்டில் இருந்து 1 கிலோ நகை திருlட்டு போயிருந்தது. இது தொடர்பாக  26ம் தேதி  காலை  8.30 மணிக்கு புகார் வந்தது .  இது தொடர்பாக மூன்று தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தோம் சிசிடிவி கேமராக்கள்

ஆய்வு செய்யப்பட்டு அதன் வாயிலாக குற்றவாளிகளை கண்டுபிடித்தோம்.

மொத்தமாக திருட்டு போன தங்க நகை வெள்ளி மற்றும் பணம் உள்ள அனைத்தும் கைப்பற்றப்பட்டது.

குற்றவாளிகள் மீது ஏற்கனவே 18 வழக்கு நிலுவையில் உள்ளது – இந்த குற்றவாளி மீது ஏற்கனவே குண்டர் தடுப்பு காவல் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜெயிலில் இருந்து வந்த இரண்டாவது நாளே மீண்டும் திருடி உள்ளார்.

நகைக் கடை மற்றும் நகை சார்ந்த தொழில்களில் ஈடுபடுவார்கள் safety லாக்கர்களை வைத்து மிகவும் பாதுகாப்பாக கையாள வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளோம்.

இந்த வழக்கை பொறுத்த வரை சி.சி.டி.வி கேமரா திருட் டு போன வீட்டின் அருகிலேயே இருந்ததால் அதன் வாயிலாகவே காட்சிகளை கைப்பற்றினோம்.

மாநகரில் திருட்டு சம்பவங்களை குறைப்பதற்காக அதிகப்படியான சிசிடிவி கேமராக்கள் வேண்டும் என்று கேட்டுள்ளோம் – முக்கியமான இடங்களில் இரவு நேரங்களில் அதிகமான காவலர்கள் பாதுகப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

45 திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளது இதில் 38 வழக்குகளை முழுமையாக கண்டுபிடித்து தீர்வு கண்டுள்ளோம்.

ஜெயிலில் இருந்து வெளியில் வருபவர்கள் குறித்து தொடர்ந்து தகவல்களை சேகரித்து அவர்களை மானிட்டரிங் செய்து வருகிறோம்.

மாநகரின் பல்வேறு பகுதிகளில் ரோட்டோரங்களில் அதிகப்படியாக இருசக்கர வாகனங்களை நிறுத்துவதை பார்க்க முடிகிறது .இதனை தடுப்பதற்காக போக்குவரத்து துணை ஆணையர் தலைமையில் ஆலோசனை மேற்கொண்டு உள்ளேன்.

பெரிய கடை வீதி,  சின்ன சின்ன கடைகளில் கூட இது போன்று கிலோ கணக்கில் நகைகள் விற்கப்படுகிறது – அவர்களுக்கான ஆலோசனை குறித்த கேள்விக்கு…..

கோத்ரேஜ் போன்ற நல்ல லாக்கர்களை வாங்கி , கிரில் கேட்ஸ் போட்டு மிகவும் பாதுகாப்பாக நகைகளை வைப்பது நல்லது – பெரும்பாலான கடைகளில் சிசிடிவி கேமராக்கள் இல்லாமல் இருப்பதை பார்க்க முடிகிறது – கண்டிப்பாக சிசிடிவி கேமராக்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!