Skip to content
Home » மாமல்லபுரம்.. கடலில் குளித்த ஆந்திரா மாணவர்கள்..4 பேர் மாயம்.. ஒருவர் பலி!

மாமல்லபுரம்.. கடலில் குளித்த ஆந்திரா மாணவர்கள்..4 பேர் மாயம்.. ஒருவர் பலி!

சென்னை, மாமல்லபுரம் அருகே கடலில் குளித்த ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த கலைக் கல்லூரி மாணவர்கள் 9 பேர் கடலில் மூழ்கினர். இதில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மாயமான 4 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

ஆந்திரா மாநிலம், அனந்தப்பூர் பகுதியைச் சேர்ந்த கலைக் கல்லூரி மாணவர்கள் 18 பேர் மாமல்லபுரத்திற்கு சுற்றுலாவிற்காக இன்று வருகை தந்திருந்தனர். இதேபோல் நலகாம்பள்ளியைச் சேர்ந்த கலைக்கல்லூரி மாணவர்கள் 22 பேர் தனி குழுவாக மாமல்லபுரம் சுற்றுலா வந்தனர்.

அங்குள்ள பல்வேறு புராதனச் சின்னங்களையும் அவர்கள் தனித்தனியே பார்வையிட்டனர். இதையடுத்து 40 பேரும் கடற்கரைக்கு வருகை தந்தனர். கடல் சீற்றம் அதிகமாக இருந்த போதும், அதனை பொருட்படுத்தாத மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டோர் கடலில் இறங்கி குளித்துள்ளனர்.

மாணவர்களிடம் போலீஸார் விசாரணை
மாமல்லபுரம் கடற்கரை
இதுகுறித்து உடனடியாக காவல் துறையினருக்கும், மீட்புப் படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படகு மூலம் மாயமான மாணவர்கள் மவுனிஷ் (18), பார்த்துஷா (19), சேசாரெட்டி (25), பெத்துராஜ் (26) ஆகிய 4 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். கடலில் மூழ்கியதில் காப்பாற்றப்பட்ட 4 மாணவர்களுக்கும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு குணமாகினர். கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால் பலமுறை எச்சரித்தும் மாணவர்கள் கேட்காமல் கடலில் இறங்கியதால் இந்த விபத்து நேர்ந்ததாக அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!