Skip to content
Home » எனக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட ஆசை…. நடராஜன்…

எனக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட ஆசை…. நடராஜன்…

  • by Senthil

சேலத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கடுமையாக பயிற்சி எடுத்து வருகிறேன். நான் சார்ந்துள்ள அணிக்காக கடுமையாக உழைக்க வேண்டும், அதே நேரத்தில் நானும் கவனத்தோடு ஆட உள்ளேன். ஐபிஎல் போட்டியில் இளைஞர்களை எதிர்கொள்ள ஒவ்வொரு அணிகளும் ஒரு திட்டம் வைத்திருப்போம். என் வாழ்க்கை வரலாறை படமாக்குவதாக சிவகார்த்திகேயன் தான் கூறியுள்ளார். ஆனால் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கிரிக்கெட்டிற்கு பின்னர் தான் அதைப் பற்றி யோசிக்க முடியும்” என்றார்.

சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வந்த நடராஜனுக்கு வரவேற்பு
சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வந்த நடராஜனுக்கு வரவேற்பு
மாணவர்களிடன் கேள்விகளுக்கு பதிலளித்த நடராஜன்
மாணவர்களிடன் கேள்விகளுக்கு பதிலளித்த நடராஜன்

டிஎன்பிஎல், ஐபிஎல் இரண்டும் எனக்கு முக்கியம் தான். இரண்டிற்கும் முக்கியத்துவம் கொடுத்து விளையாடுவேன். ஐபிஎல் வந்தாலும் டிஎன்பிஎல் என்பது என்னை அடையாளம் காட்டியது. எனவே அதிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். இந்திய அணியில் நான் மீண்டும் விளையாடுவது, இந்த ஆண்டு ஐபிஎல் விளையாடுவதில் உள்ளது. நிச்சயமாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் இந்திய அணியில் விளையாடுவேன்” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!