Skip to content
Home » இந்தியாவில் நம்பர் 1…….பாதுகாப்பான மெட்ரோ நகரம்…. நம்ம சென்னை

இந்தியாவில் நம்பர் 1…….பாதுகாப்பான மெட்ரோ நகரம்…. நம்ம சென்னை

  • by Senthil

இந்தியாவில் உள்ள பாதுகாப்பான மெட்ரோ நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடத்தில் உள்ளது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. செர்பியா நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நம்பியோ என்ற தனியார் நிறுவனம், பிபிசி, தி டெலி கிராப், தி ஏஜ், சைனா டெய்லி, தி வாஷிங்டன் போஸ்ட், USA டுடே உள்ளிட்ட பல்வேறு செய்தி நிறுவனங்கள் வெளியிடும் செய்திகளின் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், உலகின் முக்கிய நகரங்கள் குறித்து மேற்கொண்ட ஆய்வு பட்டியலை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில் பாதுகாப்பான மெட்ரோ நகரங்களின் பட்டியலில் இந்திய அளவில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது. உலக அளவில் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் சென்னை 127வது இடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் மற்ற இந்திய நகரங்களான மும்பை 161வது இடத்திலும் கொல்கத்தா 174வது இடத்திலும் டெல்லி 263வது இடத்திலும் உள்ளன.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ‘அவ்தார்’ என்ற நிறுவனம், ‘வாழ்வியல் சூழ்நிலை, பாதுகாப்பு, பெண்களுக்கான முக்கியத்துவ முன்னெடுப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு நடத்தியது. இதில் 10 லட்சத்துக்கும் மேல் மக்கள்தொகை உள்ள நகரங்களின் வரிசையில் 78.4 புள்ளிகளுடன் சென்னை பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பானமாநகரம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்திய அளவில் பாதுகாப்பான மாநகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடம் பிடித்திருப்பது சென்னை போலீசாரை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. சென்னை போலீஸ் மாநகர மக்களின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்த தன்னைஅர்ப்பணித்து வருகிறது என்று போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!