Skip to content
Home » பிரதமர் மோடிக்கு…. தமிழக மக்களின் 3 கேள்விகள்…..முதல்வர் வலைத்தள பதிவு

பிரதமர் மோடிக்கு…. தமிழக மக்களின் 3 கேள்விகள்…..முதல்வர் வலைத்தள பதிவு

  • by Senthil

தேர்தல்  நெருங்கி வரும் நேரத்தில் பிரதமர் மோடி, வெளியுறவித்துறை அமைச்சர் ஜெய்சங்கர்,  மற்றும் பாஜக தலைவர்கள் திடீரென கச்சத்தீவு பிரச்னையை கிளப்பி உள்ளனர்.  கச்சத்தீவை தாரை வார்த்ததற்கு காங்கிரசும், திமுகவும் தான் காரணம் என அவர்கள் கூறி உள்ளனர். இதற்கு  தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலின், சுடச்சுட பதில் அளித்து  தனது வலைத்தள பதிவில் கூறி இருப்பதாவது:

“பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான்.

1. தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்?

2. இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டபோதும், தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்?

3. பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா?

திசைதிருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர் அவர்களே…

#பதில்_சொல்லுங்க_மோடி”

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!