Skip to content
Home » சீனா கேஸ் சிலிண்டர்… நாகையில் கரை ஒதுங்கியது…. போலீஸ் விசாரணை

சீனா கேஸ் சிலிண்டர்… நாகையில் கரை ஒதுங்கியது…. போலீஸ் விசாரணை

நாகை நம்பியார்  நகரை சேர்ந்த மீனவர்கள் இன்று வழக்கம் போல் கடலுக்கு மீன் பிடிக்க செல்வதற்காக கடற்கரைக்குச் சென்றனர் அப்போது கடற்கரையில் நடந்து சென்ற சில மீனவர்கள் கண்ணில் வெள்ளை வர்ணம் பூசிய உருளை வடிவிலான மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கி இருந்ததை கண்டனர்.  அதனை கடற்கரை மணல் பகுதிக்கு கொண்டு வந்த மீனவர்கள், மர்ம பொருள் குறித்து நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்த அங்கு விரைந்து வந்த கஸ்டம்ஸ் அதிகாரிகள், க்யூ பிரிவு போலீசார் மற்றும் மெரைன் போலீசார் ஆகியோர் உருளை வடிவிலான மர்ம பொருளை கைப்பற்றி சோதனை மேற்கொண்டனர். சீன எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்த அந்த சிலிண்டரில் கேஸ் நிரப்பப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. மேலும் கேஸ் சிலிண்டர் 3 அடி உயரமும் 30 கிலோ எடையுடன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வெடிக்காத கேஸ் சிலிண்டரை கைப்பற்றிய மெரைன் போலீசார் அதனைப் பாதுகாப்பாக அங்கிருந்து எடுத்துச் சென்றுள்ளனர்.

வங்க கடல் வழியாக தமிழக கடற்பகுதிக்கு மர்மமாக மிதந்து வந்துள்ள சீன நாட்டு கேஸ் சிலிண்டர், கப்பலில் இருந்து கடலில் தவறி விழுந்ததா? அல்லது கடலில் தூக்கி வீசப்பட்டதா என்பது குறித்து கியூபிரிவு போலீசார் மற்றும் இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் தீவிர விசாரணையும் சோதனையும் மேற்கொண்டுள்ளனர். வங்க கடலில் மிதந்து வந்த சீன நாட்டு மர்ம பொருள் ஒன்று இன்று தமிழக கடற்கரையில் ஒதுங்கி இருப்பது நாகையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!