Skip to content
Home » புதிய நாடாளுமன்றத்தில் சோழர் கால செங்கோல் நிறுவ முடிவு

புதிய நாடாளுமன்றத்தில் சோழர் கால செங்கோல் நிறுவ முடிவு

டில்லியில் புதிய நாடாளுமன்றத்தை  வருகிற 28-ந் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். ஆனால், மக்கள் பணத்தில் கட்டப்பட்டது என்பதாலும், நாட்டின் முதல் குடிமகள் என்பதாலும் ஜனாதிபதி திரவுபதி முர்முதான் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின.  மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி போன்றவர்கள் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டனர். இதையடுத்து வரும் 28ம் தேதி திறக்கப்பட உள்ள நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை 19 எதிர்கட்சிகள் புறக்கணிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

புதிதாக திறக்கப்பட உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் சோழர் காலத்து செங்கோல் நிறுவப்பட உள்ளதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார். நாடு சுதந்திரம் அடைந்த போது  முதல் பிரதமர் நேருவுக்கு திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய செங்கோல் அது,  எனவும், நாடாளுமன்ற மக்களவையில் சபாநாயகர் இருக்கை முன் அந்த  செங்கோல் நிறுவப்பட உள்ளதாகவும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!