போக்குவரத்து கழகத்தில் நிரந்தர பணியிடங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி. ஐ.டி.யூ சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உணவு இடைவேளையின்போது நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். தேவையான புதிய பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும், புதிய பணி நியமனங்களுக்கு ஒப்பந்த முறை அரசாணையை ரத்து செய்ய வேண்டும், நிரந்தர பணியிடங்களில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு முழக்கமிட்டனர்