Skip to content
Home » தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று டில்லி பயணம்…

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று டில்லி பயணம்…

சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.230 கோடியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. தரைத்தளம் மற்றும்6 மேல் தளங்களுடன் சுமார் 51,429சதுரமீட்டர் பரப்பில் மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு இதயம், நெஞ்சகம், சிறுநீரகம், மூளை நரம்பியல், ரத்தநாளங்கள், குடல் – இரைப்பை,புற்றுநோய் ஆகிய பிரிவுகளுக்கான அறுவை சிகிச்சை துறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கருணாநிதி நூற்றாண்டையொட்டி, 1,000 படுக்கைகளுடன் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அழைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று டில்லி செல்ல திட்டமிட்டிருந்தார். சென்னை விமான நிலையத்துக்கு நேற்று இரவு 8 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார். அவருடன் தலைமைச் செயலாளர் இறையன்பு, முதல்-அமைச்சரின் செயலாளர் உதயசந்திரன் ஆகியோரும் வந்தனர். இரவு 8.30 மணிக்கு டெல்லி நோக்கி புறப்படும் விமானத்துக்காக காத்திருந்தனர். இந்தநிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் புறப்பட தாமதமாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் விமான நிலையத்தின் வி.ஐ.பி. அறையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காத்திருந்தார்.  இரவு 9.30 மணி தாண்டியும் விமானத்தில் ஏற்பட்ட பிரச்சினை சரிசெய்யப்படவில்லை. மேலும் இன்னும் அதிக தாமதமாகும் என்று அதிகாரிகள் கூறிய நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டெல்லி பயணத்தை ரத்து செய்தார். அதனைத்தொடர்ந்து அவர் அங்கிருந்து வீடு திரும்பினார். இன்று பயணம் இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை டில்லிக்கு விமானத்தில் புறப்பட்டு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!