தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 22ம் தேதி திருச்சியில் பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து அவர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். நேற்று கோவையில் நடந்த பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தியுடன் கலந்து கொண்டு பேசினார்.
இன்று மாலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நீலகிரி, திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவினாசி பழங்கரையில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதற்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் திருப்பூர், நீலகிரி ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட திருப்பூர், கோபி, பெருந்துறை, பவானிசாகர், சத்தியமங்கலம், அவினாசி, கவுண்டம்பாளையம், கூடலூர், ஊட்டி ஆகிய பகுதிகளில் இருந்து திரளான மக்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் அமைச்சர் வருகையையொட்டி, பாதுகாப்பு நடவடிக்கையாக திருப்பூரில் இன்று டிரோன்கள் பறக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.