Skip to content
Home » மாற்றுதிறனாளிகளுக்கு அதிநவீன செயற்கை உபகரணங்கள்…. முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…

மாற்றுதிறனாளிகளுக்கு அதிநவீன செயற்கை உபகரணங்கள்…. முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று சென்னை, கலைஞர் கருணாநிதி நகர், அரசு புனர்வாழ்வு மருத்துவமனையில் புதிய ஒப்புயர்வு மையக் கட்டடத்தை திறந்து வைத்தார். பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள், இலவச செயற்கை அவயவங்கள், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச அதிநவீன செயற்கை உபகரணங்கள், இலவச சக்கர நாற்காலிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டைகள் ஆகிய நலத்திட்ட

உதவிகளை வழங்கினார். இவ்விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்  மா. சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர்  ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர்  ஏ.எம்.வி.பிரபாகரராஜா, துணை மேயர்  மு. மகேஷ் குமார், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார்,  மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் டாக்டர் ஆர். ஆனந்த குமார்,  மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர்  ஜெசிந்தா லாசரஸ்,  தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர்  ஷில்பா பிரபாகர் சதீஷ்,  இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநர்  எஸ். கணேஷ்,   தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் டாக்டர் எஸ். உமா, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் தீபக் ஜேக்கப், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!