Skip to content
Home » கனிமொழியை ஆதரித்து…..தூத்துக்குடியில் இன்று வாக்கு சேகரித்தார் முதல்வர் ஸ்டாலின்

கனிமொழியை ஆதரித்து…..தூத்துக்குடியில் இன்று வாக்கு சேகரித்தார் முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து  பிரசாரம் செய்து  வருகிறார்.   நேற்று  நாங்குநேரி தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார்.  இன்று தூத்துக்குடி திமுக வேட்பாளர்  கனிமொழியையும், ராமநாதபுரம் தொகுதி முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி ஆகியோரை  ஆதரித்து  பிரசாரம் செய்கி்றார். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சிந்தலக்கரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் பொதுக்கூட்டம் இன்று மாலை  நடக்கிறது.முதல்வர் வருகையையொட்டி தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி வந்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தூத்துக்குடி நகரில் வேட்பாளர் கனிமொழியுடன் வீதி வீதியாக சென்று ஆதரவு திரட்டினார். காமராஜர் மார்க்கெட்டுக்கு சென்று  ஆதரவு திரட்டினார். அப்போது வியாபாரிகள், பொதுமக்களை சந்தித்து  உதயசூரியனுக்கு வாக்கு கேட்டார்.

முதல்வருடன் வேட்பாளர் கனிமொழி,  அமைச்சர்கள்  அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன்  மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் ஏராளமானவர்கள்  சென்று வாக்கு சேகரித்தனர்.

அதேபோல தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை பிரசாரம் மேற்கொள்கிறார். தூத்துக்குடி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இன்று (செவ்வாய்கிழமை) பிரசாரம் செய்கிறார்.

 பிரசாரத்திற்காக இன்று மதியம் விமானம் மூலம் தூத்துக்குடி வருகைதரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.பின்னர் மாலை 4 மணியளவில் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் உள்ள மைதானத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். தொடர்ந்து அவர் நெல்லை புறப்பட்டு செல்கிறார். தூத்துக்குடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஒரே நாளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள் என்பதால் தேர்தல் பரபரப்பு நிலவி வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!